Skip to main content

பாலியல் புகார் பாதிரியார் டிஸ்சார்ஜ்....

Published on 22/09/2018 | Edited on 22/09/2018
franco


கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமைகள் செய்ததாக சொல்லப்பட்ட பாதிரியார் பிராங்கோ இன்று காலை போலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். முதன் முறையாக இந்திய நாட்டிலேயே பாதிரியார் ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்படுவது இதுதான்.
 

கேரள கன்னியாஸ்திரிகள் 13 பேரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக கூறப்படும் பாதிரியார் பிராங்கோ முலக்கல், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கொச்சி காவல்துறையினரிடம் ஆஜராகினார். இந்த விசாரணையை கேரள காவல்துறையின் க்ரைம் பிரிவு வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் தலைமையிலான ஐந்துபேர் கொண்ட குழு நடத்தி வருகிறது. பிராங்கோ காவல்துறையினரிடம் ஆஜராகினால், கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் நேற்று கேரள உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை வருகின்ற 25ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்க எடுத்துக்கொள்வதாக இருந்தது.
 

நேற்று முந்தினம் பாதிரியார் பிராங்கோவுடன் காவல் துறை விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் வாடிக்கனிலிருந்து பாதிரியார் பிராங்கோ வகித்த பதவியிலிருந்து விடிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக போலிஸார் விசாரணையை தொடர்ந்து நடத்தினர்.
 

இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று பாதிரியார் பிராங்கோவை கைது செய்வதாக அறிவித்தனர். கைது செய்யப்பட்டவுடன் பாதிரியார் நெஞ்சுவலி என்று போலிஸாரிடம் சொல்ல, அவரை சிகிச்சைக்காக கோட்டையும் அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை முடிந்துவிட்டதால் மருத்துவமனையில் இருந்து பாதிரியார் பிராங்கோவை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலியல் புகார் பாதிரியார் ஃப்ராங்கோவுக்கு ஜாமீன்....

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
case


கேரளாவில் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பாதிரியார் ஃப்ராங்கோ. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இவர், தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். கேரள உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், பாதிரியார் ஃப்ராங்கோவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

முன்னதாக  இவரின் மீது அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, பாதிரியார் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். இதனையடுத்து வாட்டிக்கனும் இவரின் மீது நடவடிக்கை எடுத்து இவரின் பொறுப்பிலிருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

பாலியல் புகார் பாதிரியார் மீண்டும் சிறையில் அடைப்பு!!!

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
pastoral


கேரளாவில் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் பிராங்கோவின் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கேரள உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இவரின் மனு நேற்று மதியம் 1:45 மணிக்கு விசாரணை செய்வதாக இருந்தது.
 

ஆனால், பாதிரியார் பிராங்கோவுக்கு கொடுக்கப்பட்ட போலிஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்ததால், கோட்டயம் நீதிமன்றத்தில் பிராங்கோவை ஆஜர் செய்தனர். பின்னர், கோட்டயம் நீதிமன்றம் பாதிரியார் பிராங்கோவை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் பலா கிளைச்சிலையில் பாதிரியார் பிராங்கோ அடைக்கப்பட்டார்.
 

இதனிடையே ஜாமீன் கோரி பிராங்கோ தாக்கல் செய்த மனுவை வரும் வியாழக்கிழமை விசாரிப்பதாக கேரள உயர் நீதிமன்றம் நேற்று தள்ளி வைத்தது.