Skip to main content

பேஸ்புக் காதலனுடன் வாழ 2 வயது மகனை கொலை செய்து பழியை கணவன் மீது சுமத்திய தாய் கைது...

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

பிரணவ் மற்றும் சரண்யா இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் வியான் என்ற மகன் உள்ளான். இந்த தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக சரண்யா கணவரை விட்டு பிரிந்து தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
 

facebook lover

 

 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சரண்யா தனது கணவருக்கு போன் செய்து சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தன்னை வந்து அழைத்து செல்லும்படியும் கேட்டுள்ளார். இதனால் சரண்யாவின் வீட்டிற்கு இரவு வந்த பிரணவ் அங்கேயே தங்கிவிட்டு காலை நம் வீட்டிற்கு செல்லலாம் என்று சரண்யாவிடம் கூறியுள்ளார். 

இரவு அவருடன் உறங்கிக்கொண்டிருந்த மகன் காலையில் பிரணவ் விழித்து பார்க்கும்போது காணாவில்லை. இதன்பின் குழந்தையை பிரணவ்தான் கடத்திவிட்டார் என்று சரண்யா கூச்சலிட்டுள்ளார். போலிஸ் ஸ்டேஷன் சென்று, என் மீது இருக்கும் கோபத்தால் மகன் வியனை ஆள் வைத்து கடத்திவிட்டார் என்று போலிஸிடம் புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து பிரணவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பின் சரண்யா மீது சந்தேகமடைந்த போலீஸார், சரண்யாவை அழைத்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசியதை அடுத்து விசாரணையை வேறு விதமாக அனுகியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் வியானின் தாய்.

சரண்யாவுக்கும், அந்த பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத வாலிபர் ஒருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன் பிறகு அவர்கள் 2 பேரும் போனில் பேசி தங்கள் நட்பை வளர்த்துக்கொண்டனர். நாளடைவில் அவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது. 

பேஸ்புக் காதலனுடன் சேர்ந்து வாழ குழந்தை வியான் இடையூறாக இருப்பார் என்பதால் குழந்தையை கொலை செய்ய  சரண்யா திட்டமிட்டிருக்கிறார். அதேசமயம் கொலை பழியை கணவர் மீது போடவும் முடிவு செய்து, வீட்டிற்கு  போன் செய்து வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார்.

சம்பவத்தன்று அதிகாலையில் அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது குழந்தையை தூக்கிக் கொண்டு அந்த பகுதியில் உள்ள கடலுக்கு சென்ற சரண்யா குழந்தையை கடலில் வீசி கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல வீட்டிற்கு வந்து நாடகமாடி உள்ளார். இதைத் தொடர்ந்து சரண்யாவை போலீஸார் கைது செய்தனர். அவர் குழந்தையை வீசிய கடல் பகுதிக்கு சென்று போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு குழந்தையின் பிணம் கடற்கரையில் ஒதுங்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.