தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு செல்லும் ரயிலில் பயணிகளிடம் கொள்ளையடித்தே மலேசியாவில் ஒருவர் ஹோட்டல் வாங்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்திலிருந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயிலில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கேரளாவின் திருச்சூரை சேர்ந்த சாகுல் ஹமீது, இதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து மலேசியாவில் ஹோட்டல் ஒன்றை வாங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட சாகுல் ஹமீதிடம் 110 சவரன் நகை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் நடந்த விசாரணையில் இந்த ஹோட்டல் விவகாரம் குறித்து தெரிய வந்துள்ளது.