Skip to main content

ஹோட்டல் உரிமையாளர் துண்டு துண்டாக வெட்டி கொலை; பெண் உட்பட மூவர் கைது

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

kerala malappuram hotel owner and dismissed labour related incident 

 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம்  திரூர் நகரைச் சேர்ந்தவர் சித்திக் (வயது 58). இவர் கோழிக்கோடு எலத்திபாலம் என்ற பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என அவரது மகன் போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் போலீசாரின் தொடர் விசாரணையில் சித்திக் வங்கிக் கணக்கில் இருந்து மிகப்பெரிய தொகை  ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது.

 

இந்நிலையில் பாலக்காட்டை அடுத்துள்ள அகளி வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பிறகு போலீசார் அங்கு சென்று சூட்கேஸைத் திறந்து பார்த்துள்ளனர்.அப்போது போது அந்த சூட்கேஸில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம்  இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் காணாமல் போன சித்திக் தான் இது என்று போலீசார் உறுதி செய்தனர்.

 

போலீசார் சந்தேகத்தின் பேரில் சித்திக்கின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுடன் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது சித்திக்கின் ஹோட்டலில் வேலை செய்து வந்த  சிபில் (வயது 36) மற்றும் பர்ஹானா (வயது 34) ஆகியோர் மாயமாகி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை தீவிரமாக போலீசார் தேடி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சென்னையில் இருப்பதை போலீசார் அறிந்து கொண்டனர். அதனை தொடர்ந்து  சாதுர்யமாக செயல்பட்டு இருவரையும் கைது செய்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சித்திக்கை கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். 

 

இவர்கள் இருவரும் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "கடந்த 18ஆம் தேதி ஓட்டல் உரிமையாளர் சித்திக் எங்கள் இருவரையும் வேலையில் இருந்து நீக்கி விட்டார். அதனால் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்து வந்தோம். மேலும் அவரிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கில் கடந்த 23 ஆம் தேதி சித்திக்கை கடத்தி கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றோம். பின்னர் அங்கு வைத்து அவரை கொலை செய்து உடல் பாகங்களை துண்டு, துண்டாக வெட்டினோம். பின்னர் அவரது உடலை சூட்கேசில் வைத்து அகளி வனப்பகுதியில் வீசி சென்றோம்" என தெரிவித்தனர். இவர்களுக்கு உடந்தையாக பர்ஹானாவின் தம்பி ஆஷிக் என்பவரும் இருந்துள்ளார். இதையடுத்து அவரையும்  கைது செய்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையின் போது இவர்கள் இருவரும் அளித்த வாக்குமூலம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.