கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில்கேரளா மூணாறு,பெட்டி முடிபகுதியில் உள்ளகண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில்தோட்டதொழிலாளர்கள்குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கியநிலையில்,நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆகஉயர்ந்துள்ளது. மேலும் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூணாறுஅரசுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 20 தோட்ட தொழிலார்களின்வீடுகள் முழுமையாக சேதம்அடைந்துள்ளது.தற்பொழுது மீதமுள்ள 44 பேர்களைதேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.