Skip to main content

மிகப்பெரிய சூரிய சக்தி படகு உருவாக்கி சாதனைப் படைத்த கேரளா!

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

கேரளாவில் சாலை வழி போக்குவரத்தைக் காட்டிலும் நீர்வழி போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. அந்த மாநிலத்தில் சிறிய அளவிலான படகுகள் முதல் பெரிய அளவிலான படகுகள் வரை பயணிகள் போக்குவரத்துக்காகவும், சரக்கு போக்குவரத்துக்காகவும் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக கேரள மாநில அரசு நீர்வழி போக்குவரத்து துறை (எஸ்டபிள்யூடிடி) என்ற துறையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரூபாய் 3 கோடி செலவில் 100 பேர் பயணிக்கும் வகையில் மிகப்பெரிய சூரிய சக்தி படகு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படகு டிசம்பர் மாதம் போக்குவரத்து பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

 

 

 

KERALA GOVERNMENT LAUNCHED LARGEST FIRST SOLAR BOAT

 

 

 

ஏற்கனவே 2016- ஆம் ஆண்டு சூரிய ஒளி சக்தியால் இயங்கக்கூடிய சிறிய படகை உருவாக்கி கேரளா சாதனைப் படைத்தது. தற்போது அதை விட பெரிய அளவில் சூரிய ஒளி சக்திப் படகு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய ஒளி சக்திப் படகு சுமார் 80 கிலோ வாட் திறன் கொண்டது. இந்த படகு உருவாக்க ரூபாய் 3 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கேரளா நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த படகின் பெயர் ஆதித்யா ஆகும். அதே போல் சாதாரண டீசல் படகுகளை பயன்படுத்தும் போது தினமும் ரூபாய் 8000 செலவழிக்க வேண்டும். ஆனால் இந்த சூரிய ஒளி சக்தி படகு பயன்படுத்துவதன் மூலம் ரூபாய் 200 மட்டுமே செலவாகும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

 

 

ADITYA SOLAR BOAT

 

 

இந்த வகை படகுகள் காற்று மற்றும் ஒலி மாசுப்பாடுகளை ஏற்படுத்தாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் இந்த படகு சேவை தொடரும் எனவும், அதன் பிறகு எர்ணாகுளம், கொச்சின் உள்ளிட்ட இடங்களில் சூரிய ஒளி சக்தி படகின் சேவை விரிவு செய்யப்படும் என கேரள மாநில படகு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தன. மேலும் இரண்டு அடுக்குகளை கொண்ட இந்த வகை படகுகள் கீழ் அடுக்கில் மட்டும் ஏ.சி வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் மிகப்பெரிய சூரிய சக்திப் படகு உருவாக்கி கேரள சாதனைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.