ADVERTISEMENT

கரோனா காரணமாக பேருந்தில் பயணிப்போரின் எண்ணிக்கையை குறைத்து, கட்டணத்தை உயர்த்தும் கேரள அரசு!

09:10 PM May 15, 2020 | suthakar@nakkh…



உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 45 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 82,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்நிலையில் தென் இந்தியாவில் முதலில் கரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமான கேரளாவில் கரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வருகின்றது. இதுவரை 560 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 64 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் லாக் டவுனுக்கு பிறகு மேற்கொள்ள வேண்டி நடவடிக்கைகளுக்கு அம்மாநில அரசு தற்போதே தயாராகி வருகின்றது. அந்த வகையில் பேருந்துகளில் சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில், 38 பேர் அமரும் பேருந்துகளில் 19 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று பேர் இருக்கையில் இருவரும், இரண்டுபேர் இருக்கையில் ஒருவரும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நின்று செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் பேருந்து கட்டணத்தை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT