Kerala gold issue ... Swapna in court

Advertisment

கேரளாவையே உலுக்கிய தங்க கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்தஸ்வப்னாசுரேஷ்தமிழகம் வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், நேற்று பெங்களூரில் கைது செய்யப்பட்டார். என்.ஐ.ஏ போலீசார் அவரை கைது செய்தநிலையில்இன்றுகொச்சியில் உள்ள நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டஸ்வப்னா, சந்தீப் ஆகியோர்நீதிமன்றத்தில் தற்போது ஆஜர்படுத்தப்பட்டனர். பெங்களூரில் கைது செய்தஇருவரையும் கொச்சி அழைத்து வந்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக இருவருக்கும் கரோனாபரிசோதனை செய்யப்பட்டது. ஆஜர் படுத்தப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோருக்கு14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.