Skip to main content

மனைவியை விஷப்பாம்பை விட்டுக் கடிக்கவைத்துக் கொன்ற கணவன்... அதிர்ச்சி பின்னணி...

Published on 26/05/2020 | Edited on 26/05/2020

 

kerala girl snake biting case

 

கேரளாவில் திருமணமான இரண்டே வருடங்களில் மனைவியைப் பாம்பை விட்டுக் கடிக்கவைத்து கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவின் அடூரைச் சேர்ந்தவர் சூரஜ் (27). தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த சூரஜிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உத்ரா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. 100 சவரன் நகை, கார் உள்ளிட்ட வரதட்சனைகளோடு உத்ராவைத் திருமணம் செய்துகொண்ட சூரஜ் அடூரில் உள்ள தனது வீட்டில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 2 ஆம் தேதி, வீட்டிற்கு வெளியே உத்ராவை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இதனைப் பார்த்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அங்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் ஏப்ரல் 22 அன்று உத்ரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, கொல்லம் மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்து வந்துள்ளார்.
 


இந்தச் சூழலில் மே 7- ஆம் தேதி காலை, உத்ரா தனது பெற்றோர் வீட்டின் படுக்கையறையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உத்ராவின் பெற்றோர், தங்கள் மகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் உத்ரா விஷப் பாம்பு கடித்து இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். தனது மக்களின் இறப்பில் சந்தேகமடைந்த சித்ராவின் தந்தை இதுகுறித்து போலீஸாரிடம் புகாரளித்துள்ளார். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், கணவர் சூரஜ் தான் உத்ராவைப் பாம்பை விட்டுக் கடிக்கவைத்துக் கொன்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டாம் திருமணம் செய்வதற்கு இடையூறாக இருந்த உத்ராவைக் கொல்ல திட்டமிட்டு 10,000 ரூபாய் கொடுத்து மார்ச் 2 அன்று விஷப்பாம்பு ஒன்றை வாங்கி வீட்டில் விட்டுள்ளார் சூரஜ். இந்த முயற்சி தோல்வியில் முடிந்து, உத்ரா பிழைத்துக்கொண்டதை அடுத்து மீண்டும் மே 2 ஆண்டு 10,000 ரூபாய் கொடுத்து மற்றொரு பாம்பை வாங்கி, பெற்றோர் வீட்டிலிருந்த உத்ராவின் அறையில் விட்டுள்ளார் சூரஜ். இதில் பாம்பு இரண்டுமுறை உத்ராவை கடித்து அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் உறுப்பினராக இருந்த சூரஜ், அதனைப் பயன்படுத்தி பாம்புகளைப் பெற்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, சூரஜிற்குப் பாம்பு விற்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.