Advertisment

கேரள சிறுமியை பாதிரியார் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமி திடுக்கிடும் தகவல்!!

CHILD RAPE

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

கேரளாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும் பொழுது திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

Advertisment

கண்ணூரில் உள்ள கொட்டியூர் என்ற இடத்தில் செயல்பட்டுவந்த ஒரு சர்ச்சில் ராபின்(48) என்ற பாதிரியார் பலமுறை16 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து கடந்த 2017-ஆம் ஆண்டு அந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் அந்த தகவலை சிறிதும் வெளியிடாமல் அந்த சிறுமியை ஒரு ஆதரவற்றோர்காப்பகத்தில் கொண்டு சேர்த்துள்ளனர். 16 வயது சிறுமி குழந்தை பெற்ற சம்பவம் கண்ணூர் குழந்தைகள் நல அமைப்பினருக்கு தெரியவர இது தொடர்பாக மீண்டும் ராபினைகைது செய்தனர்.

அப்போது போலீசார் அந்த சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் பாதிரியார் ராபின் பல ஆசை வார்த்தைகளை கூறி தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார் என கூறியுள்ளார்.

அதன் பின் கடந்த செவ்வாய் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையின் பொழுது நீதிபதி சிறுமியை விசாரித்தபொழுது நானும் ராபினும் சம்மதத்துடன்தான் உறவுக்கொண்டோம் எனது குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவே அவரை திருமணம் செய்துகொண்டு வாழ விரும்புகிறேன் என பல்டி அடிக்கும்படி திடுக்கிடும் பதிலை தெரிவித்தார்.

போலீஸ் விசாரணையில் ஒன்று நீதிமன்றத்தில் ஒன்று என மாற்றி மாற்றி சொன்ன பதிலால் அந்த சிறுமி பிறழ் சாட்சி என அறிவித்துள்ளது நீதிமன்றம்.

Child abuse churuch father Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe