இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில்கரோனா பாதிப்பில் கேரளாவில் முதல்முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கேரள மாநிலத்தில் 170- க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 69 வயதான முதியவர் உயிரிழந்தார். இந்த தகவலை எர்ணாகுளம் மாவட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் என்.கே. குட்டப்பன் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்தியாவில் முதன் முதலில் கேரளாவில் தான் கரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.