ADVERTISEMENT

கேரளாவில் முதல் முறையாக 200ஐ தாண்டிய கரோனா தொற்று!

08:17 PM Jul 03, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.

ADVERTISEMENT

இன்று மட்டும் கேரளாவில் 211 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4,964 பேர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். மொத்தமாக 2,098 மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 130 ஹாட் ஸ்பாட்டுகள் உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இன்று தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 138 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 39 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 27 பேர் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முதன் முறையாக 200க்கும் மேற்பட்ட தொற்று பதிவு செய்யப்படுவது இதுவே கேரளாவில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT