Advertisment

கேரளாவை திணறடிக்கும் கரோனா... ஒரே நாளில் 702 பேருக்கு கரோனா!

hj

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.

Advertisment

நேற்று மட்டும் கேரளாவில் 702 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 123 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 51 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும்கேரளா வந்தவர்கள். பலருக்கும் நோயாளிகளின்தொடர்புகள் மூலம் கரோனா ஏற்பட்டுள்ளது. இன்று மேலும் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து, அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 64 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 112 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 10,054 ஆக உயர்ந்துள்ளது.மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,727ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

Kerala corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe