Skip to main content

கேரள அரசை கண்டித்து சாலையில் அமர்ந்து ஒணம் விருந்து சாப்பிட்ட காங்கிரஸ் கட்சியினர்!

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

ஓணம் பண்டிகையின் போது மதியம் குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்து ஒண சாப்பாடு சாப்பிடுவது தான் அந்த பண்டிகையின் பிரதானம். இது அன்றைய தினம் ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக நடப்பதில் ஒன்று. இந்த நிலையில் ஒணம் பண்டிகை அன்று கொச்சி அருகே வைப்பின் தீவு நாயரம்பலம் பகுதியை சேர்ந்த மக்கள் காங்கிரசாருடன் சேர்ந்து, நெடுங்காடு சாலையில் அமர்ந்து மதிய ஒணம் விருந்து சாப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

kerala congress party members  sitting on the road eating in celebrating the onam festival


இது குறித்து காங்கிரஸ் பிரமுகர் வினோத் கூறும் போது, நெடுங்காடு, பனம்பள்ளி, நாயரம்பலம். ஹெர்பட் பாலம் போன்ற பகுதிகளில் உள்ள சாலைகள் பல மாதங்களாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பள்ளி கல்லூரி வாகனங்களும் வர முடியாததால் மாணவ, மாணவிகள் பெரும் கஷ்டப்படுகின்றனர். அதேபோல் இந்த பகுதி சாலை ஒன்றின் பணிகளை முடிக்காமல் பாதியிலேயே கிடப்பில் போட்டு பல மாதங்கள் ஆகிறது.


 

இதை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் கடந்த 2-ம் தேதி பனம்பள்ளி சாலையில் பள்ளத்தில் சிறுமி ஒருவர் அத்தப்பூ கோலம் போடும் புகைப்படம் சழூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சாலையின் நிலையை குறித்து தலைமை செயலகத்தில் இருக்கும் முதல்வருக்கும் சம்மந்தப்பட்ட அமைச்சருக்கும்,  அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துவதற்கு வேண்டி தான் மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒணம் விருந்தை வீட்டில் இருந்து சாப்பிடுவதற்கு பதில் சாலையில் உட்கார்ந்து சாப்பிட்டு அரசுக்கு உணர்த்தினோம் என்றார். பொதுமக்கள் சாலையில் உட்கார்ந்து ஒணம் விருந்து சாப்பிட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.