வேளான் சட்டங்கள் மீதான விவாதம்! - ஆளுநருக்கு மீண்டும் பரிந்துரைத்த கேரளா!

kerala cm vijayan

மத்திய அரசின்புதிய வேளாண்சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், டெல்லிமாநில அரசு வேளாண்மசோதாக்களை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றியது.

அதனைத் தொடர்ந்து, கேரளமாநில அரசும்வேளாண்சட்டங்கள் குறித்துவிவாதிக்க சிறப்புசட்டசபை அமர்வைக்கூட்டுமாறு அம்மாநிலஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. ஆனால் இப்பரிந்துரையை கேரளஆளுநர் ஏற்கமறுத்துவிட்டார். இதனைஎதிர்த்து கேரளமுதல்வர் கடிதம் எழுதினார். அதற்குப் பதிலளித்த ஆளுநர், கேரளஅரசு தீர்வு வழங்க அதிகாரமில்லாத ஒரு பிரச்சனை குறித்து விவாதிக்க, சிறப்புஅமர்வைக் கூட்டுமாறு கேட்டதால், சிறப்புஅமர்வைக் கூட்டவில்லை எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் வேளாண்சட்டங்கள் குறித்துவிவாதிக்க வரும் டிசம்பர் 31 ஆம் தேதி, கேரளஅரசு சட்டமன்றத்தைக் கூட்டஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளது. சிறப்பு சட்டமன்ற அமர்வைக் கூட்டஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், வழக்கமானசட்டசபை அமர்வைக் கூட்டகேரளஅரசுபரிந்துரைக்க இருப்பதுகுறிப்பிடத்தக்கது.

cm pinarayi vijayan farm bill farmer protest.
இதையும் படியுங்கள்
Subscribe