Skip to main content

எம்.எல்.ஏ சீட் வேண்டாம்.... கவர்னர் பதவி தான் வேண்டும்... பாஜக மூத்த தலைவர்!

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்திருப்பது போல், கேரளாவிலும் 5 தொகுதியில் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் வட்டியூர்காவு, எா்ணாகுளம், கோணி, ஆலுவா 4 தொகுதிகளில், அந்த எம்எல்ஏக்கள் பாராளுமன்ற தோ்தலில் போட்டியிட்டு எம்பி ஆனதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனா். மஞ்சேஸ்சூரி தொகுதி எம்எல்ஏ மரணமடைந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.
 

இந்த நிலையில் வட்டியூர் காவு தொகுதியில் பாஜக சார்பில் மிசோரம் முன்னாள் கவா்னா் கும்மணம் ராஜசேகரன் பெயா் அறிவிக்கப்பட்டது. இது கும்மணம் ராஜசேகரணின் விருப்பம் இல்லாமல் தான் பாஜக மாநில தலைமை அறிவித்தது. உடனே கும்மணம் ராஜசேகரன் எம்எல்ஏ சீட் எனக்கு வேண்டவே வேண்டாம் அப்படியென்றால் கவா்னா் பதவிக்கு மோடியிடமும் அமித்ஷாயிடமும் என்னை பரிந்துரை செய்யுங்கள் பாஜக தலைவா் ஸ்ரீதரன் பிள்ளையிடம் கும்மணம் ராஜசேகரன் கறாராக சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. 

kerala bjp party senior leader kummanam rajashekaran not interest assembly by election


ஏற்கனவே கேரளா மாநில பாஜக தலைவராக இருந்த கும்மணம் ராஜசேகரை அந்த பதவியை ராஜினாமா செய்ய வைத்து விட்டு மிசோரம் கவர்னராக மத்திய அரசு  நியமித்து. பின்னர் கடந்த பாராளுமன்ற தோ்தலில் கவர்னர் பதவியை ராஜினாமா  செய்ய வைத்து திருவனந்தபுரம் தொகுதியில் கும்மணம் ராஜசேகரனை பாஜக சார்பில்  போட்டியிட்டு அதில் அவா் தோற்றார்.
 

இந்த நிலையில் தான் அவா் மீண்டும் கவர்னராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தார். இதற்கு மோடியும் அமித்ஷாவும் எந்த சிக்னலும் காட்டாமல் இருந்து வருகின்றனா். இந்த நிலையில் தான் வட்டியூர்காவு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் தான் கும்மணம் ராஜசேகரன் ஆத்திரமடைந்தார். இதனையடு்த்து வட்டியூர்காவு தொகுதி்க்கு கும்மணம் ராஜசேகரனுக்கு பதில் திருவனந்தபுரம் மாவட்ட பாஜக தலைவர்  வழக்கறிஞா் சுரேஷ் அறிவித்தது பாஜக தலைமை. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.