ADVERTISEMENT

கரோனா பாதிப்பு - மிக முக்கிய அறிவிப்பு வெளியிட்ட சுகாதாரத்துறை!

01:10 PM Feb 20, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மகாராஷ்டிராவில் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகிறது. இந்த இரு மாநிலத்திலும் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் மகாராஷ்டிராவில் 65,550 பேரும், கேரளாவில் 39,353 பேரும் தற்போது சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது இந்தியாவில் தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையில் 75 சதவீதம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT