காஷ்மீரில் பெய்து வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், பனிப்பொழிவு காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளிலும் பனிமூடிக் கிடப்பதால் காஷ்மீரின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கடும் பனியால் பிரசவத்திற்கு பின் வீடு திரும்ப முடியாமல் தவித்த பெண்ணை 6 கி.மீ தூரம் வீட்டிற்கு தூக்கிச் சென்றனர் ராணுவ வீரர்கள். அதேபோல், இமாச்சல் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக லஹால்- ஸ்பிட்டி தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.