Advertisment

கடன் பிரச்சனை... பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்குதல்... (வீடியோ)

கர்நாடகாவின் சாமராஜ்நகர் மாவட்ட கொலிகல் என்ற பகுதியில் வசித்து வரும் ராஜாமணி என்ற பெண் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisment

karnataka woman beaten for not returning debt properly

சிறிய உணவகம் ஒன்றையும், சிட் பண்ட் தொழிலையும் செய்து வரும் ராஜாமணி, வேறு ஒருவரிடம் கடன் வாங்கி அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கடனாக கொடுத்துள்ளார். அவரிடம் கடன் வாங்கியவர்கள் திரும்ப கடனை தராததால், ராஜமணியால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

Advertisment

அவருக்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தை உடனடியாகத் திரும்பக் கேட்டு மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe