Skip to main content

மே-23 ஆம் தேதி கர்நாடகாவிலும் ஆட்சி மாற்றம்?

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றது. அதில் மொத்தமுள்ள 225 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக கூட்டணி 104 சட்டமன்ற தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 77 தொகுதிகளையும், மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சி 37 தொகுதிகளையும் கைப்பற்றியது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113  எம்எல்ஏக்கள்  தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அதிக எம்எல்ஏக்களை கொண்ட பாஜக கட்சி  முதலில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சி , மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்கவும், முதல்வர் பதவியை விட்டு கொடுக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்து கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்களை சமாதானப்படுத்தியது.

 

 

 

JDS AND CONGRESS

 

அதன் பிறகு ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார். அவர் பதவி ஏற்ற நாள் முதல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மறைமுகமாக முதல்வருக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஒரு அரசு நிகழ்ச்சியில் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி பேசும் போது கண்ணீர் விட்டு அழுதார். ஏனெனில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள்  அடுத்த முதல்வர் சித்தராமையா  என்று அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்நிலையில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து தற்போது தேர்தலை சந்தித்துள்ளது மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் ஜேடிஎஸ் 7 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டனர்.

 

JDS

 

 

இத்துடன் கர்நாடகாவில் இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல்களும் நடைப்பெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே-23 தேதி நடைப்பெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக நேரடியாக களம் இறங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் , மத்தியில் மாநில கட்சிகள் ஆட்சி அமைத்தாலும் காங்கிரஸ் ஆதரவு தர தயாராக உள்ள நிலையில் , கர்நாடகாவில் முதல்வர் மாறுவாரா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்பியுள்ளன. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் எனில் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் , மறுபக்கம் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக உள்ள எம்எல்ஏக்கள். இதனால் மே-23 ஆம் தேதிக்கு பிறகு தெளிவான அரசியல் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமருக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லையே?” - சித்தராமையா

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Siddaramaiah says The Prime Minister doesn't even have this basic knowledge?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

காங்கிரஸ், வாக்கு வங்கி அரசியலுக்காக பட்டியலின,பழங்குடியின,பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறித்து, பிறருக்கு வழங்கும் ஆட்டத்தை ஆடியது. பின்னர், கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்ற பா.ஜ.க, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டிலிருந்து காங்கிரஸ் அரசு உருவாக்கிய இஸ்லாமிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

Siddaramaiah says The Prime Minister doesn't even have this basic knowledge?

பிரதமர் மோடி இந்த சர்ச்சை பேச்சுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு மாற்றியதாக பிரதமர் கூறியது அப்பட்டமான பொய். இது அறியாமையிலிருந்து உருவானது. தோல்வி பயத்தில் இருந்து பிறந்த அவரது விரக்தியின் அறிகுறியாகும். நமது நாட்டின் வரலாற்றில் எந்த தலைவரும் பிரதமரின் அலுவலகத்தை இவ்வளவு கீழ் நிலைக்கு இழிவுபடுத்தியதில்லை.

பொறுப்பான பதவியில் இருப்பதால், பிரதமர் நரேந்திர மோடி இந்த பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அல்லது, தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலின மற்றும் பழங்குடியின இட ஒதுக்கீடுகளை இஸ்லாமியர்களுக்கு வழங்கப் போவதாக காங்கிரஸ் எங்கே கூறியுள்ளது? காங்கிரஸின் கீழ் எந்த மாநில அரசு இது போன்ற ஒரு கொள்கையை அமல்படுத்தியுள்ளது?

சமூக மற்றும் பொருளாதார ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடுகளில் திருத்தங்கள் செய்ய முடியும். மேலும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. இத்தகைய திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் தேவை. ஒரு பிரதமருக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாதது நம் நாட்டிற்கு உண்மையிலேயே சோகமானது” எனக் கூறினார். 

Next Story

“மாற்றத்திற்காக வாக்களித்தேன்” - பிரகாஷ் ராஜ்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
prakash raj voted his vote in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூருவில் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்களிப்பது ரொம்ப முக்கியமான விஷயம். நீங்க தேர்ந்தெடுக்க போறவங்க தான் உங்களுடைய எதிர்காலத்தை முடிவு பண்ண போறவங்க. உங்களுடைய குரல் அங்கு எழுப்பனும்னா ஓட்டு போடுங்க. நீங்க ஓட்டு போடலைன்னா, நீங்க கேள்வி கேட்கிற தகுதியும் அந்த உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும். குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள், அவர்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைக்கும்” என்றார். 

இதனிடையே அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ மூலம் பேசிய அவர், “மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்தேன். நான் நம்பும் மற்றும் என்னுடைய குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்யும் வேட்பாளருக்கு வாக்களித்தேன்” என்றார்.