கர்நாடக மாநிலம் பெங்களூரு நீதிமன்றத்தில் நகைக்கொள்ளை வழக்கில் சரணடைந்த கொள்ளையன் முருகனிடம் 8 நாட்கள் காவல்துறை விசாரணை நடத்த பொம்மனஹள்ளி காவல்துறைக்கு பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதை தொடர்ந்து நகை கொள்ளையன் முருகனை சென்னை மற்றும் மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த பெங்களூரு காவல்துறையினர் முடிவு செய்துள்ளன. திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக முருகன் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.