Skip to main content

"தலைச்சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது"- வெங்கையா நாயுடு பெருமிதம்!

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஸ்ரீசத்திய சாய் நிறுவனத்தின் பொன் விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று விழாவை தொடங்கி வைத்து பேசினார். இந்தியா மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கையில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை நீங்கள் படித்திருப்பீர்கள். அது கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

vice president venkaiah naidu

 

 

அனைத்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தரமான கல்வி கிடைக்க உறுதி செய்யும் வகையில் அந்த அறிக்கை அமைந்துள்ளது. சிறப்பான கல்வியை  அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்கும் வகையில் தேசிய கல்வி கொள்கையின் அறிக்கை உள்ளது . அந்த வரைவு அறிக்கை, தேசிய தேவை, நமது பண்பாடு, உலக அளவில் சிறப்பான மாணவர்களை உருவாக்க வேண்டிய தேவை ஆகியவற்றில் சமநிலையை உண்டாக்கி இருக்கிறது. இதில் தாய் மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பன்மொழி உலகில் பிற மொழிகளில் உள்ள அறிவுத்திறமையை முன்னெடுப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியா இன்று இளம் இந்தியாவாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 50 சதவீதம் பேரும், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 65 சதவீதம் பேரும் உள்ளனர்.

 

 

vice president venkaiah naidu

 

 

இதுவரை கிடைக்கப் பெறாத வாய்ப்புகளை இந்த கல்வி கொள்கை வழங்குகிறது. இது கல்வித்துறையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. 21-வது நூற்றாண்டுக்கு தேவையான திறன், அறிவாற்றல், மனநிலையை ஏற்படுத்தும் வகையில் நமது கல்வி முறை சீரமைக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கான அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று வெங்கையா நாயுடு கூறினார். நாட்டின் அனைத்து தரப்பினரும், இந்த கல்வி கொள்கையின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய வேண்டும். அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் குறித்து அனைவரும் பங்கேற்று விவாதிக்க வேண்டும்.

 

vice president venkaiah naidu

 

நமது அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் சீர்திருத்தம் செய்வதால், நமது பொருளாதாரம் வலுவானதாகவும், எதையும் தாங்கக்கூடியதாகவும் மாறியுள்ளது. நமது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. தலைச்சிறந்த  நாடுகள் பட்டியலில் இந்தியா ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நமது ஊக்கத்துடன் கூடிய வளர்ச்சியை மேலும் முடுக்கி விட வேண்டும். அதன் மீது மிக முக்கியமான கவனத்தை செலுத்த வேண்டும். நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும். இதில் நாம் தோல்வியடைவே கூடாது. நமது ஒட்டுமொத்த கல்வியை சீரமைப்பது குறித்து சிந்திக்க, புதிய விஷயங்களை கண்டுபிடிக்க இது சரியான தருணம். இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார். 

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.