Skip to main content

கடும் கட்டுப்பாடுகள் விதித்தும் குறையாத தொற்று... தவிப்பில் அண்டை மாநிலம்!

Published on 13/05/2021 | Edited on 13/05/2021
hj

 

இன்று மட்டும் கர்நாடகாவில் 35,297 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 34,057 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 13,55,985 ஆக உயர்ந்துள்ளது.  மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,20,434ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 5,93,078 ஆக உள்ளது. மேலும் இன்று மட்டும் 344 பேர் கரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக கரோனாவுக்கு 17,412 பேர் பலியாகியுள்ளனர். கரோனா அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்திற்கு வரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அவசியம் கரோனா நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்