ADVERTISEMENT

கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா தொற்று!

09:10 PM Apr 10, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


இன்று கர்நாடகாவில் 6,955 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3,350 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 9,80,275 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,55,434ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 61,484 ஆக உள்ளது.

ADVERTISEMENT

மேலும், இன்று மட்டும் 32 பேர் கரோனா காரணமாகப் பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக கரோனாவுக்கு 12,849 பேர் பலியாகியுள்ளனர். கரோனா அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்திற்கு வரும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அவசியம் கரோனா நெகட்டிவ் சான்றிதழைக் கொண்டுவர வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT