Advertisment

கர்நாடகாவில் தொடர்ந்து குறையும் கரோனா தொற்று!

cv

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. அதே போன்று தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில்,கர்நாடகாவில் கரோனா பாதிப்புகணிசமான அளவு குறைந்து வருகின்றது.

Advertisment

இன்று மட்டும் கர்நாடகாவில் 531 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 434 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 9,23,282 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,42,708 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 5,968 ஆக உள்ளது. மேலும் இன்று (௦6/௦2/21)மட்டும்3 பேர் கரோனா பாதிப்புகாரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக கரோனாவுக்கு 12,233 பேர் பலியாகியுள்ளனர். ஒருபுறம் கரோனா குறைந்து வந்தாலும், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது அம்மாநில மக்களை வருத்தமடையச்செய்துள்ளது.

Advertisment

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe