Skip to main content

கர்நாடகா மாநிலத்தில் தனியார் வேலைவாய்ப்பு நேர்காணலுக்கு சென்றால் அவர்களின் முதல் கேள்வி ? ஆனால் தமிழகத்தில்?

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

இந்தியா முழுவதும் பொறியியல் படித்த இளைஞர்கள் மற்றும் மற்ற துறையை தேர்ந்தெடுத்துப் படித்த  இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் தன் மாநில இளைஞர்களுக்கே தனியார் மற்றும் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்டத்தை இயற்றியுள்ளது . இதனால் தமிழக இளைஞர்கள் கர்நாடகா மாநிலத்தில் தனியார் வேலை வாய்ப்பு நேர்காணலுக்கு செல்லும் போது அந்நிறுவனத்தின் நேர்காணலின் போது எழுப்பப்படும்  முதல் கேள்வி உங்களுக்கு கன்னடம் தெரியுமா? நீங்கள் கர்நாடகாவை சார்ந்தவர்களா? என நேர்காணலில் நம்மிடம் கேள்வியை எழுப்புக்கிறார்கள் . ஆனால் தமிழகத்தில் தனியார் வேலை வாய்ப்பு நேர்காணலுக்கு சென்றால் ஆங்கிலம் தெரியுமா ? என கேட்கிறார்கள் .

 

 

YOUNGERS SEARCH THE JOB

 

 

இதனால் தான் தமிழக இளைஞர்கள் மத்திய அரசின் வேலை வாய்ப்பிலும் சரி , தமிழகத்திலுள்ள தனியார் வேலை வாய்ப்பிலும் சரி மற்ற மாநில இளைஞர்களே அதிக அளவில் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள் . இது குறித்து சமீபத்தில் "ட்விட்டரில் ட்ரெண்ட்" ஆனது . அதில் " தமிழக வேலை வாய்ப்பு தமிழர்களுக்கே " என்ற தமிழக இளைஞர்களின் குரல் எதிரொலித்தது . ஆனால் தமிழக அரசும் , தமிழக தொழிற்துறை அமைச்சகமும்  இது குறித்து  கண்டுக்கொள்ளவில்லை . அதே போல் கர்நாடகாவை பின்பற்றி சட்டத்தை இயற்ற தயங்கும் தமிழக அரசு என்றே கூறலாம் . ஏனெனில் தமிழகத்தில் தற்போது அனைத்து மாநில இளைஞர்களும் தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர் . இதனால் உள்ளூர் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற முடியாமல் தவித்து வருகின்றனர் . இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது . அதனைத் தொடர்ந்து பெயரளவில் மட்டுமே ஆண்டுதோறும் தமிழகத்தில் நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு . அதன் நிலை என்ன ? எத்தனை பேர் வேலை வாய்ப்புக்களை பெற்றுள்ளனர் என்ற விவரங்களை தமிழக அரசு ஏன் வெளியிடவில்லை என இளைஞர்கள் தமிழக அரசிடம் கேள்வி எழுப்புகிறார்கள் .

 

 

KARNATAKA AND TAMILNADU JOBS SEARCH

 

 

மேலும் இளைஞர்களின் வேலை வாய்ப்புயின்மையால் அவர்களின் குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கின்றனர் . எனவே தமிழக அரசு தமிழக தனியார் மற்றும் அரசு வேலை வாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும் , குறைந்த பட்ச ஊதியம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதியளிக்க வேண்டும் என தமிழக அரசை இளைஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் . மேலும் இது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு ஆய்வு பணிகளை தொடங்க வேண்டும் என்று இளைஞர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் . இவ்வாறு தமிழக அரசு நடவடிக்கைள் எடுக்கும் பட்சத்தில் தமிழுக்கும், தமிழக இளைஞர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது .

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .