Karnataka Minister orders to Ban on plastic used for making idlis

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் இருந்து 251 வெவ்வேறு இட்லி மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பினர். முன்பு, இட்லி சமைக்கும்போது துணி பயன்படுத்தப்பட்டது; இப்போதெல்லாம் சில இடங்களில் துணிக்குப் பதிலாக பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. எனவே, எங்கள் துறை இதை விசாரித்தது. 251 மாதிரிகளில், 52 மாதிரிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டன.

Advertisment

பிளாஸ்டிக்கில் புற்றுநோய்க் காரணிகள் இருப்பதால், இது இட்லியில் சேரக்கூடும் என்பதால் இதைச் செய்யக்கூடாது. இது நடக்காமல் இருக்க சுகாதாரத் துறை விரைவில் அதிகாரப்பூர்வ உத்தரவுகளை பிறப்பிக்கும், மேலும் விதியை மீறும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிராகவோ அல்லது பிளாஸ்டிக் தாள்களைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.