ADVERTISEMENT

"சடலத்துடன் உறவு கொண்டவரை தண்டிக்க முடியாது" - உயர்நீதிமன்றம் அதிரடி

04:21 PM Jun 01, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 22). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரை கடத்தி சென்று கொலை செய்துள்ளார். மேலும் அந்த இளம்பெண்ணின் சடலத்துடன் உறவு கொண்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை துமகூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றவாளியான ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும் பிணத்துடன் உறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தண்டனையை எதிர்த்து ரங்கராஜ் தரப்பில் கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர். அதில் இளம்பெண்ணை கொலை செய்த குற்றத்திற்கு ரங்கராஜனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை தீர்ப்பை உறுதி செய்தனர். மேலும் சடலத்துடன் உறவு கொண்ட குற்றத்திற்காக வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் தெரிவிக்கையில், "இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பெண்ணின் சடலத்துடன் உறவு கொண்டுள்ளார். இது சட்டப்படி குற்றமாகுமா இல்லையா எனும்போது சட்டப்படி ஒரு இறந்த உடலை மனிதராக கருத முடியாது. அதனால் இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 375 மற்றும் 377 (இயற்கைக்கு மாறான உடலுறவு) ஆகியவை இந்த குற்றத்திற்கு பொருந்தாது. மேலும் 376-வது சட்டப்பிரிவின் (பாலியல் வன்கொடுமை) கீழ் அது தண்டனைக்குரிய குற்றம் ஆகாது. அதனால் இறந்து போன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வது குற்றம் என்பதை உறுதி செய்ய இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்" என தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT