Skip to main content

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத எம்.எல்.ஏவை சஸ்பெண்ட் செய்து மாயாவதி அதிரடி!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று மாலை 07.30 மணியளவில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல்வர் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், அரசுக்கு எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அரசுக்கு எதிராக உறுப்பினர்கள் அதிகளவில் வாக்களித்ததால், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதனை தொடர்ந்து குமாரசாமி நேற்று இரவு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார். குமாரசாமியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுருந்தது. இந்நிலையில் ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் அரசு கவிழ்ந்ததால், முன்னாள் முதல்வர் குமாரசாமி, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.  

 

karnataka floor test not participate bsp party mla mahesh suspended announced party president mayavati

 

கர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மகேஷ் கொல்லேகல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் முந்தைய குமாரசாமி அரசுக்கு, தனது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ மகேஷ், ஆதரவு அளிப்பார் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மகேஷ் எம்.எல்.ஏ முன்னாள் முதல்வர் குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் குமாரசாமி அரசுக்கு மறைமுக எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, கட்சி தலைமை உத்தரவிட்டும், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத மகேஷ் எம்.எல்.ஏவை கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வில் இணைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Action against special police assistant inspectors who joined BJP!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.  

பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ அண்ணாமலை பங்கேற்ற நடைப்பயணம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் காவல் சீருடையில் இருந்துகொண்டே பா.ஜ.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது. 

இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி தஞ்சை சரக டிஐஜிக்கு அறிக்கை அனுப்பினார். அதன் அடிப்படையில்,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் நாகப்பட்டினம் ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், தஞ்சை சரக டிஐஜி உத்தரவின் பேரில் அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன. 

Next Story

2 ஆசிரியர்கள் மாயமான வழக்கில் அலட்சியம்; எஸ்.எஸ்.ஐ 2 பேர் மீது அதிரடி நடவடிக்கை

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
2 Authors are mysterious case; Action against 2 SSIs

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (44). இவருக்கு திருமணமாகி காயத்ரி என்ற மனைவி உள்ளார். வெங்கடேசன், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிபுரிந்து வந்த அதே பள்ளியில், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த தீபா (42) என்ற கணித ஆசிரியரும் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 15ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற வெங்கடேசனும், தீபாவும், மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதில் பதற்றமடைந்த வெங்கடேசனின் மனைவி காயத்ரி, இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே போல், தீபாவின் கணவரான பாலமுருகன் வி.களத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கோவை நகரில் நின்ற தீபாவின் காரை காவல்துறையினர் கண்டுபிடித்து சோதனை நடத்தினர். 

அந்த சோதனையில், தீபாவின் தாலி, 2 குண்டு, தீபா மற்றும் வெங்கடேசன் ஆகியோரின் செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள், ரத்தக்கறை படிந்த சுத்தியல், அரிவாள் போன்ற ஆயுதங்களை கைப்பற்றினர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து 5 தனிப்படை அமைத்து 2 பேரையும் தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். ஆனால், ஆசிரியர்கள் 2 பேரை பற்றி எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. 

இதனிடையே, குரும்பலூரைச் சேர்ந்த வெங்கடேசனின் உறவினர்கள் சிலர் தேனிக்கு சென்று வெங்கடேசனை கண்டுபிடித்து அவரது சொந்த ஊரான குரும்பலூருக்கு அழைத்து வந்து பெரம்பலூர் எஸ்.எஸ்.ஐ பாண்டியனுக்கு ரகசியமாக தகவல் கொடுத்து குரும்பலூருக்கு வருமாறு கூறினர். ஆனால், எஸ்.எஸ்.ஐ பாண்டியன் அவர்களிடம் மறுநாள் ஸ்டேசனுக்கு வெங்கடேசனை அழைத்து வரும்படி அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த வெங்கடேசன் குரும்பலூரில் இருந்து தப்பி சென்றுள்ளார். அதே போல், தீபாவின் கணவர் வி.களத்தூர் போலீஸ் ஸ்டேசனில் கடந்த மாதம் 18ஆம் தேதி புகார் கொடுத்தும், வி.களத்தூர் எஸ்.எஸ்.ஐ முஹமது ஜியாவுதீன் வழக்குப்பதிவு மட்டும் செய்துவிட்டு தேடும் பணியை துரிதப்படுத்தாமல் மெத்தனமாக இருந்துள்ளதாக தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. 

இதனையடுத்து, இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி கவனத்துக்கு தனிப்படை போலீசார் கொண்டு சென்றனர். இதையடுத்து, பணியில் அலட்சியமாக இருந்ததாக பெரம்பலூர் எஸ்.எஸ்.ஐ பாண்டியன், வி.களத்தூர் எஸ்.எஸ்.ஐ முஹமது ஜியாவுதீன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.ஷ்யாம்ளாதேவி அதிரடியாக நேற்று (21-12-23) உத்தரவிட்டார்.