Skip to main content

கரோனா பாதிப்பில் இருந்து குணமான கர்நாடக முதல்வர் சித்தராமையா டிஸ்சார்ஜ்!

Published on 13/08/2020 | Edited on 13/08/2020

 

ருப


நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டுள்ளது.

 

மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கரோனா குணமானதை அடுத்து சித்தராமையா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆபரேஷன் தாமரை?; பா.ஜ.க. மீது சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
BJP Siddaramaiah accused of BJP for operation lotus

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அந்த வகையில், பா.ஜ.க - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் பா.ஜ.க சதி திட்டம் நடத்தி வருவதாக அம்மாநில காங்கிரஸ் தரப்பினர் அவ்வப்போது குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். அதே வேளையில். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் என்று பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய முதல்வர் சித்தராமையா, “கடந்த ஒரு வருடமாக எனது தலைமையிலான அரசை கவிழ்க்க பா.ஜ.க.வினர் முயற்சி செய்து வருகின்றனர். எங்கள் எம்.எல்.ஏக்களுக்கு ரூ.50 கோடி வரை வழங்க தயாராக இருந்தார்கள். ஆனால், அவர்களால் அதை செய்ய  முடியவில்லை. எங்கள் எம்.எல்.ஏக்கள் என்றைக்குமே விட்டு செல்லமாட்டார்கள். ஒரு எம்.எல்.ஏ கூட எங்கள் கட்சியை விட்டு செல்லம்மாட்டார்கள். எனது ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர்” என்று கூறினார். 

Next Story

“இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை” - சித்தராமையா அதிரடி அறிவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Siddaramaiah's action announcement that Not going to contest elections

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. 

இந்த தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, கர்நாடகா முதல்வர் சித்தராமையா தீவிர பிரச்சாரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இனி வருகின்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அதிரடி அறிவிப்பை முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். 

கர்நாடகா மாநிலம், மைசூருவில் நேற்று (03-04-24) வேட்பாளரை ஆதரித்து முதல்வர் சித்தராமையா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வருணா தொகுதி மக்கள், மீண்டும் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் இனி வருகின்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என நான் முடிவு செய்துள்ளேன். எனக்கு இப்போது 77 வயது. எனக்கு இன்னும் 4 ஆண்டுகள் தான் பதவிக்காலம் இருக்கிறது. அப்போது எனக்கு 81- 82 வயது ஆகியிருக்கும். 82 வயதில் என்னுடைய உடல் நலம் சரியாக இருக்காது. அப்போது, என்னால் மகிழ்ச்சியாக வேலை செய்ய முடியாது.

2028ஆம் ஆண்டில் கர்நாடகாவில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரும் போது எனக்கு 82 வயதாகி, நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பேன். அப்போது, நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகி விடுவேன்” என்று தெரிவித்தார்.