கர்நாடக மாநிலத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலத்தின் 15 தொகுதிகளுக்கு சில தினங்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜக குறைந்தபட்சம் 6 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலையில் தேர்தலை சந்தித்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில் கர்நாடகா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கியது. தேர்தல் நடைபெற்ற 15 இடங்களில் 12 இடங்களில் முன்னிலை பெற்று பாஜக தனது ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் எடியூரப்பா தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார். பெரும்பான்மைக்கு 6 இடங்களே தேவைப்பட்ட நிலையில் பாஜக 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 1 இடத்தில் முன்னிலை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மராட்டியத்தில் ஆட்சி அமைத்து அது நான்கு நாட்கள் கூட நிலைக்காமல் கைவிட்டுபோன சோகத்தில் இருந்த பாஜகவுக்கு கார்நாடக தேர்தல் வெற்றி உற்சாகத்தை கொடுத்துள்ளது.