Skip to main content

நம்பிக்கை வாக்கெடுப்பு: இன்றே நடத்த சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுரை!

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் கர்நாடகா மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை, பாஜக கடத்தி விட்டதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சிவகுமார் சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டார்.

 

KARNATAKA ASSEMBLY FLOOR TEST GOVERNOR VAJUBHAI VALA ANNOUNCED CM HD KUMARASAMY SHOCKING

 

 

அதனைத் தொடர்ந்து ஸ்ரீமந்த் பாட்டீல் எம்.எல்.ஏ மும்பையில் உள்ள ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் கர்நாடகா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது அனைத்து கட்சி தலைவர்களும் பேசி வருவதால், நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

 

KARNATAKA ASSEMBLY FLOOR TEST GOVERNOR VAJUBHAI VALA ANNOUNCED CM HD KUMARASAMY SHOCKING

 

 

மேலும் ஆட்சியை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளன. அதே சமயம் பாஜக எம்.எல்.ஏக்களை ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் திட்டமிட்டு கால தாமதம் செய்வதாக ஆளுநரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துங்கள் என ஆளுநர் வஜூபாய் வாலா, சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு வேண்டுகோள் விடுத்தார். அவை நிகழ்வுகளை கண்காணிக்க ஆளுநரின் செயலர் கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகை. கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால், முதல்வர் குமாரசாமி அரசு கவிழும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டிகள்!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

ipl match for today

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (31/10/2020) இரு போட்டிகள் நடக்கின்றன.

 

துபாயில் இன்று (31/10/2020) பிற்பகல் 03.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. அதேபோல், ஷார்ஜாவில் இன்றிரவு 07.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

 

 

Next Story

மக்களவையில் 14, மாநிலங்களவையில் 15 மசோதாக்கள் நிறைவேறின-  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி! 

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 18- ஆம் தேதி கூடியது. இந்த கூட்டத்தொடரில் எஸ்பிஜி பாதுகாப்பு, குடியுரிமை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. குளிர்கால கூட்டத்தொடரில் கடைசி நாளான இன்று (13.12.2019) காலை அவை கூடியதில் இருந்தே ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

parliament winder season over for today lok sabha 14 bills passed, rajya sabha 15 bills passed

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, என்று எங்கு சென்றாலும் 'மேக் இன் இந்தியா' குறித்து பேசி வரும் நிலையில், தொடர் பாலியல் வன்முறைகள் அரங்கேறி, 'ரேப் இன் இந்தியா'வாக தற்போது நம் நாடு உள்ளதாக விமர்சித்தார்.


ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்நிலையில் இன்று (13.12.2019) ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டன. அப்போது பேசிய ராகுல் காந்தி, "இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது" என தெரிவித்தார். இதையடுத்து, மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.  parliament winder season over for today lok sabha 14 bills passed, rajya sabha 15 bills passed

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் 14 மசோதாக்களும், மாநிலங்களவையில் 15 மசோதாக்களும் நிறைவேறியுள்ளது என்றும், மக்களவையில் 116%, மாநிலங்களவையில் 100% ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது என்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.