Skip to main content

கர்நாடக சட்டப்பேரவையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு- தேதியை அறிவித்த முதல்வர் எடியூரப்பா!

Published on 26/07/2019 | Edited on 26/07/2019


கர்நாடகா மாநிலத்தின் நான்காவது முறையாக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். பெங்களுருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் பாஜக கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

 

karnataka assembly floor test date announced cm yeddiurappa

 

 

பதவியேற்புக்கு பின் பெங்களுருவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா, ஜூலை 29 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் காலை 10.00 மணியளவில் பெரும்பான்மை நிரூபிக்க உள்ளதாக தெரிவித்தார். ஆளுநர் முதல்வர் எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஜூலை 31 ஆம் தேதி காலக்கெடு நிர்ணயித்த நிலையில், முதல்வர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கர்நாடக அமைச்சரவை குறித்து பாஜகவின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

karnataka assembly floor test date announced cm yeddiurappa

 

அதே போல் கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபித்தவுடன், நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் என கூறினார். கர்நாடக சட்டப்பேரவை மொத்தம் 224 உறுப்பினர்களை கொண்டது. இதில் பாஜகவுக்கு 105 உறுப்பினர்களும், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கூட்டணிக்கு 100 உறுப்பினர்களும், அதிருப்தி உறுப்பினர்கள் 14 பெரும், மூன்று பேர் தகுதி நீக்கம், இரண்டு சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் மீண்டும் இரண்டாவது முறையாக கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜிஎஸ்டி வரிக்குறைப்பு குறித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர்!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

medicine gst reduced finance minister nirmala sitharaman announced

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (12/06/2021) காலை காணொளி மூலம் 44- வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர்  அனுராக் தாகூர், மத்திய நிதித்துறைச் செயலாளர், ஜிஎஸ்டி அதிகாரிகள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.

 

இந்த ஜிஎஸ்டி கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கருப்பு பூஞ்சைச் சிகிச்சைக்கான ஆம்போடெரிசின்- பி மருந்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் மீதான ஜிஎஸ்டி வரி 18%-ல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து மீதான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்கான 'Tocilzumab' மருந்துக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

gst

பல்ஸ் ஆக்சிமீட்டர் மீதான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சானிடைசர் மீதான ஜிஎஸ்டி 18%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர், வெண்டிலேட்டர் மாஸ்க் மீதான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை கருவிகள் மீதான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28%- ல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

 

 

Next Story

பிப். 25 முதல் பிப்.27 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

 

சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (23/02/2021) காலை 11.00 மணிக்கு சட்டப்பேரவையின் கூட்டம் கூடியது. அதைத் தொடர்ந்து, 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். 

 

இதனிடையே, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடைக்கால பட்ஜெட்டை புறக்கணித்துப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன், "தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்ததும் மீண்டும் சட்டப்பேரவைக்கு வருவோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிதி மேலாண்மையைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சிக்கு அழிக்க முடியாத கரும்புள்ளியை ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஏற்படுத்தியுள்ளனர்." என்றார்.

tamilnadu assembly interim budget session till feb 27th

 

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் ராமசாமி கூறுகையில், "அறிவிப்புகளில் ஆர்வம் காட்டுவதைப் போல் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காட்டவில்லை" எனக் குற்றம்சாட்டினார். 

tamilnadu assembly interim budget session till feb 27th

 

அதைத் தொடர்ந்து, நடப்பு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளனர். 

 

இந்த நிலையில், கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் வரும் பிப்ரவரி 27- ஆம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும். பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்; பிப்ரவரி 27-ஆம் தேதி பட்ஜெட் விவாதத்திற்கு பதிலுரை; பிப்ரவரி 25-ஆம் தேதி சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். மேலும், பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்கள், உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.