கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் அறிவித்ததை போன்றே அனைத்து கட்சி கூட்டம் இன்று விதான் சௌவ்தாவில் தொடங்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
+
கர்நாடகாவின் முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவரான பாஜகவின் எடியூரப்பாவும் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில் காவேரி மேலாண்மை ஆணையம் பற்றியும், காவிரி ஒழுங்காற்றுக்குழு பற்றியும் பேச இருப்பதாக முன்பே தெரிவித்திருத்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசாங்கம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு விஷயத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை காதுகொடுத்து கேட்காமல், அவர்களே ஒரு முடிவு எடுத்து கர்நாடக விவசாயிகளுக்கு துரோகம் விளைவித்ததாக குமாரசாமி இதற்கு முன்பே தெரிவித்திருந்தார்.
ADVERTISEMENT
Show comments