Advertisment

குறிவைக்கும் ஐஎஸ் -கே; தலிபான்களிடம் உதவி கேட்ட ஜெய்ஷ்-இ-முகமது - இந்தியாவைச் சுற்றும் ஆபத்து!

india

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அதன் காரணமாக இந்தியாவிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக உளவுத்துறை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு காபூலில் தாக்குதல் நடத்திய ஐஎஸ்-கோராசான்அமைப்பின் திட்டங்களுள் இந்தியாவில் கலீபா ஆட்சியை(இஸ்லாமிய தலைமையின் கீழானஆட்சி) நிறுவுவதும் ஒன்று என இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

மேலும்ஐஎஸ்-கோராசான்அமைப்பு, தங்களது ஜிஹாத்தை முதலில் மத்திய ஆசியாவரை கொண்டு செல்லவும், பின்னர் இந்தியாவிற்குகொண்டுவரவும்திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள உளவுத்துறை வட்டாரங்கள், ஜிஹாத்திற்காக இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதையும், இயக்கத்திற்கு ஆட்களை சேர்ப்பதையும் அந்த அமைப்புமுக்கிய நோக்கங்களாக கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளன.

Advertisment

இதுமட்டுமின்றி பாகிஸ்தானைசேர்ந்த பயங்கரவாத இயக்கமானஜெய்ஷ்-இ-முகமது, தனது தலைமையகத்தைஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்திற்கு மாற்றியுள்ளதாகவும், அதேபோல் 2008 மும்பைக்தாக்குதலுக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குனாருக்குமாற்றப்படுவதாகவும்உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையேஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின்மசூத் அசார், தலிபான் இணை நிறுவனர்முல்லா அப்துல் கனி பராதர் உள்ளிட்ட தலிபான் இயக்கத்தலைவர்களை சந்தித்து, ஜம்மு காஷ்மீரில் தங்களது நடவடிக்கைகளுக்கு உதவி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

isis afghanistan taliban India
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe