Advertisment

ஜோதிராதித்யா சிந்தியா மருத்துவமனையில் அனுமதி!!!

jyotiraditya scindia admitted in hospital with corona symptoms

பாஜக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது தாயார் இருவரும் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, மத்தியப்பிரதேசத்தில் பாஜகவின் மிகமுக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது டெல்லியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த இவர், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் இருப்பதாக இன்று காலை டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்குசென்றுள்ளார். அவரது தாய்க்கும் இதே அறிகுறிகள் தென்பட்டதால், கரோனாவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள இவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், கரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

corona virus Jyotiraditya Scindia
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe