Skip to main content

ஜெ.பி.நட்டாவின் கான்வாய் மீது தாக்குதல் - பாஜக மீது சந்தேகம் எழுப்பும் அமைச்சர்!

Published on 11/12/2020 | Edited on 11/12/2020
subratha mukharjee

 

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களுக்குப் புதிய பொறுப்பாளர்களை அண்மையில் பாஜக நியமித்தது. இதனைத்தொடர்ந்து, பாஜக தலைவர் நட்டா தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில், 120 நாட்கள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்தவாரம் உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து அவர் தனது பயணத்தைத் தொடங்கினார்.  

 

இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக இன்று மேற்குவங்கத்தின் டயமண்ட் ஹார்பர் பகுதிக்கு அவர் சென்றார். அப்போது நட்டாவின் கான்வாயில் வந்த பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பல கார்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதலில் பாஜக தலைவர்கள் சிலரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்தத் தாக்குதல் குறித்து, மேற்கு வங்காள அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம், அறிக்கை கேட்டுள்ளது. இந்தநிலையில், மேற்கு வங்காள அமைச்சர் சுப்ரதா முகர்ஜீ, இந்த ஜேபி. நட்டா மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல், முதல்வர் மம்தாவின் பத்து வருட சாதனைப் பட்டியலை வெளியிடும் நிகழ்வில் இருந்து மக்களை திசை திருப்ப நடத்தப்பட்டதா என சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

 

இதுத்தொடர்பாக அவர், "ஜேபி நட்டா, தான் தாக்கப்பட்டதாக கூறுகிறார். ஆனால் அதற்கான தூண்டுதல் அவரிடமும், அவரது கட்சி தொண்டர்களிடமிருந்து வந்ததாக எங்களிடம் தகவல் உள்ளது. இந்த மொத்த எப்பிசோடையும், பாஜக திட்டமிட்டு செய்ததா என்பதை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்" என கூறினார். மேலும், "இன்று நடந்ததாக கூறப்படும் தாக்குதல், மம்தா பானர்ஜியின் சாதனைகளை சொல்லும் நிகழ்ச்சியில் இருந்து கவனத்தை திசை திருப்ப நடத்தப்பட்டதா" எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெ.பி. நட்டா வாகன பேரணி விவகாரம்; நீதிபதி அதிரடி உத்தரவு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
JP Natta vehicle rally issue Judge orders action

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் திருச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (07.07.2024) மாலை ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி முரளிசங்கர் விசாரித்தார். அப்போது நீதிபதி, “திருச்சி கண்ணப்பா ஹோட்டல் முதல் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வரை ஜெ.பி.நட்டா ரோடு ஷோவை நடத்திக்கொள்ளலாம். மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை 1.5 கி.மீ. வரை ரோடு ஷோ நடத்திக்கொள்ளலாம்” என உத்தரவிட்டார்.

மேலும் திருச்சியில் ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணியை மாற்றுப்பாதையில் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. முன்னதாக அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாகவும், கரூரிலும் பாஜக சார்பில் நடைபெற்ற  தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களில் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தேர்தல் பரப்புரையில் இருந்து குஷ்பு விலகலுக்கான காரணம் என்ன?

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Khushbu withdrawal from election campaign

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் தேர்தல் பரப்புரை பணிகளில் இருந்து விலகுவதாக பாஜக தேசிய தலைவருக்கு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் குஷ்பு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் தனது முதுகு தண்டு வடத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெறுவதை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அதே சமயம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று நான் அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் இருக்கிறேன். என்னை பாஜகவிற்காக அர்ப்பணித்துள்ளேன்.

பிரதமர் மோடியின் பாதையை பின்பற்றி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் மூழ்கிவிட்டேன். ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமாக மருத்துவரின் அறிவுரைப்படி தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலக நான் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.  முதுகு தண்டுவட எலும்பின் காயம் விரைவில் குணமடைய உங்கள் அனைவரின் ஆதரவும் நல்லெண்ணமும் தேவை” என குறிப்பிட்டுள்ளார். குஷ்பு நேற்று வடசென்னை பா.ஜ.க. வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.