Skip to main content

12-17 வயதுக்குட்பட்டவர்கள் மீது கரோனா தடுப்பூசி சோதனை - அனுமதி கோரிய வெளிநாட்டு நிறுவனம்!

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

corona vaccine

 

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழு அளவில் பயன்பாட்டில் உள்ளன. ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டாலும், அதன் வர்த்தக ரீதியிலான விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும், மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தடுப்பூசி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை.

 

இதற்கிடையே அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், இந்தியாவில் தனது ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரி இம்மாத தொடக்கத்தில் விண்ணப்பித்தது. அதன்தொடர்ச்சியாக, கடந்த ஏழாம் தேதி ஜான்சன் & ஜான்சன் நிறுவன தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால அங்கீகாரம் வழங்கப்பட்டது.

 

இந்தநிலையில் தற்போது ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், இந்தியாவில் தனது ஒற்றை டோஸ் தடுப்பூசியை 12 - 17 வயதுக்குட்பட்டவர்கள் மீது பரிசோதிக்க மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒற்றை டோஸ் வெளிநாட்டு தடுப்பூசிக்கு அனுமதியளித்த இந்தியா!

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

JOHNSON&JOHNSON

 

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழு அளவில் பயன்பாட்டில் உள்ளன. ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டாலும், அதன் வர்த்தக ரீதியிலான விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும், மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தடுப்பூசி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை.

 

இதற்கிடையே அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், இந்தியாவில் தனது ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரி சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தது. இந்தநிலையில், அத்தடுப்பூசிக்குத் தற்போது அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசின் திருத்தப்பட்ட விதிகளின்படி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு உள்நாட்டுச் சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவில் செலுத்திக்கொள்ளும் முதல் 100 பேரின் 7 நாள் பாதுகாப்பு மதிப்பீட்டுத் தரவை அந்த நிறுவனம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகே ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி முழு அளவிலான பயன்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

கரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி கோரி விண்ணப்பித்த வெளிநாட்டு நிறுவனம்!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

JOHNSON&JOHNSON

 

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழு அளவில் பயன்பாட்டில் உள்ளன. ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டாலும், அதன் வர்த்தக ரீதியிலான விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும், மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தடுப்பூசி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை.

 

இந்தநிலையில் அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், இந்தியாவில் தனது ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு, இந்தியாவில் உள்நாட்டு பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும் என்பதால், ஜான்சன் & ஜான்சனின் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏற்கனவே ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்குப் பல்வேறு நாடுகள் அனுமதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது ஒரே ஒரு டோஸை மட்டுமே கொண்டது என்பதால், இத்தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டால், அது இந்திய மக்களுக்கு வேகமாக தடுப்பூசி செலுத்துவதில் உதவும் எனவும் கருதப்படுகிறது.