Skip to main content

'நீட்' தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை- ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரிகளுக்கான எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 'எம்.பி.பி.எஸ்' மற்றும் 'பி.டி.எஸ்' இடங்கள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் உள்ள 150 இடங்கள், காரைக்காலில் உள்ள 50 இடங்கள் என மொத்தமாக 200 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

JIPMER ANNOUNCED NOT CONDUCTED BY ENTRANCE EXAM, NEET MANDATORY


மேலும் வரும் கல்வியாண்டு முதல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவதால் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு இந்திய மருத்துவ கழகம்  அனுமதி அளித்துள்ளது.  இதனால் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 249 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ஜிப்மர்க்கு என்று தனியாக நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் கருதி வரும் கல்வியாண்டு முதல் ஜிப்மர்க்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

JIPMER ANNOUNCED NOT CONDUCTED BY ENTRANCE EXAM, NEET MANDATORY

இதுதொடர்பாக ஜிப்மர் மருத்துவக் கல்லூரி முதல்வர் (DEEN)பங்கஜ்குந்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'வரும் கல்வி ஆண்டில் ஜிப்மர் தனியாக தேர்வு நடத்தாது. நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடக்கும். மத்திய சுகாதாரத்துறை மூலம் கிடைத்த உத்தரவின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://jipmer.edu.in/ என்ற இணைய தளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீட் தேர்வு தொடர்பான விவரங்களுக்கு https://ntaneet.nic.in/ntaneet/Welcome.aspx மற்றும் https://nta.ac.in/ ஆகிய இணையதள முகவரி அணுகி அறிந்துக்கொள்ளலாம். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.