ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் இந்திய அளவில் முன்னணியில் உள்ளது. போட்டி நிறுவங்கள் ஜியோவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
ஏற்கனவே ஏர்செல் நிறுவனம் மூடப்பட்ட நிலையில், ஐடியாவும் வோடபோனும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் போட்டியாளர்கள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் சி.எல்.எஸ்.ஏ அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி இந்தியா முழுவதும் 3ஜி/4ஜி இணைய சேவையை பயன்படுத்துபவர்களில் 52 சதவீதம் பேர் ஜியோ நெட்ஒர்க் சிம்கார்டுகளை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. 23 சதவீதம் பேர் ஏர்டெல் உபயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 6 மாதங்களில் வோடபோன்-ஐடியா நிறுவனத்திலிருந்து 68 மில்லியன் (6.8 கோடி) பயனாளர்கள் விலகியுள்ளதாக தெரிகிறது. அதே நேரம் புதிதாக 44 மில்லியன் (4.4 கோடி) பேர்ஜியோ நெட்வொர்க்கில் இணைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.