Skip to main content

ஆஃபர்களால் வாடிக்கையாளர்களை திணறடிக்கும் அம்பானி... 'ஜியோ ஃபைபர்' சந்தா கட்டணங்கள் வெளியீடு...

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

மொபைல் நெட்வொர்க் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் ஜியோ தற்போது 'ஜியோ ஃபைபர்'  திட்டத்தின் மூலம் பிராட்பேண்ட் துறையிலும் களம் காண்கிறது.

 

jio fiber plans

 

 

அதிரடி ஆஃபர்கள், குறைந்த கட்டணம் என டெலிகாம் துறையில் தனது போட்டியாளர்களை ஓரம்கட்டி முதலிடத்தை பிடித்துள்ளது ஜியோ நிறுவனம். இதே போன்ற அணுகுமுறையை கடைபிடித்து ஜியோ ஃபைபர் திட்டத்தையும் வெற்றி திட்டமாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

இந்தியா முழுவதும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஜியா ஃபைபரின் சந்தா திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி  Jio.com தளம் மற்றும் MyJio செயலி மூலமாக முன்பதிவு செய்து இந்த ஜியா ஃபைபர் திட்டத்தில் இணையலாம். இதற்காக முதலில் 2500 ரூபாய் பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதில் 1,500 ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட், இதைத் திரும்பப்பெற்றுக்கொள்ள முடியும். 1,000 ரூபாய் இன்ஸ்டால் செய்யும் சேவைக்கான கட்டணம்.

இந்த தொகை கட்டப்பட்ட பின் அறிமுக சலுகையாக 6,400 ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் 4K செட்-அப் பாக்ஸும், 5,000 மதிப்புள்ள ஜியோ ஹோம் கேட்வே சாதனமும் இலவசமாகக் கிடைக்கும். இதன்மூலம் இந்தியா முழுமைக்கும் அளவில்லா போன் கால்கள், 100 Mbps முதல் 1Gbps வேகம் வரையிலான அதிவேக இணைய சேவை உள்ளிட்ட பல வசதிகளை பெற முடியும்.

இந்த சேவைகள் Bronze, Silver, Gold, Diamond, Platinum, Titanium என ஆறு விலைகளில் வருகின்றன. குறைந்தபட்சமாக Bronze பிளானில் மாதம் ரூ.699 செலுத்தினால் 100 Mbps வேகத்தில் 100 GB ஒரு மாதத்திற்குக் கொடுக்கப்படுகிறது. அறிமுக சலுகையாக இத்துடன் முதல் 6 மாதங்களுக்குக் கூடுதல் 50 GB டேட்டா கிடைக்கும். இது முடிந்தவுடன் 1 Mbps இணையச் சேவை தொடரும். அதேபோல அதிகபட்சமாக Titanium பிளானில் மாதம் ரூ.8,499 செலுத்தினால் 1 Gbps வேகத்தில் மாதத்திற்கு 5000 GB டேட்டா கிடைக்கும். மேலும் ஜியோ சினிமா, சாவன் உள்ளிட்ட செயலிகளை இலவசமாக பயன்படுத்த முடியும். இவை அல்லாமல் கூடுதல் சந்தா செலுத்துவதன் மூலம் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வசதியும் இதில் உள்ளது.

மேலும், ஜியோ கோல்ட் மற்றும் சில்வர் வாடிக்கையாளர்களுக்கு 2 புளூடூத் ஸ்பீக்கர்கள் கிடைக்கும். இதேபோல் டயமண்ட், பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் ஆண்டு திட்ட சந்தாதாரர்களுக்கு இலவச எச்டி டிவி கிடைக்கும் (ஒவ்வொரு திட்டத்திற்கும் வெவ்வேறு திரை அளவு). தங்கத் திட்ட சந்தாதாரர்களுக்கு இலவசமாக 24 அங்குல எச்டி டிவியும் கிடைக்கும், ஆனால் இரண்டு ஆண்டு திட்டத்தை தேர்வு செய்தால் மட்டுமே இந்த டி.வி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு; அம்பானி, அதானி எந்த இடத்தில்?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Publication of World Rich List

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‘புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், 200 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் அமேசான் நிறுவனரான தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், மீண்டும் உலகின் முதல் பெரும் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்த டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க், 198 பில்லியன் டாலர்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். லுயுவுட்டன் ஆடம்பரப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ பெர்னார்டு அர்னால்ட், 197 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக இருக்கிறார். 150 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர், பில்கேட்ஸ் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 115 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 11வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் மற்றொரு தொழிலதிபரான அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, 104 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலக பணக்காரர்களின் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். 

Next Story

சாட் ஜிபிடி-க்கு போட்டியாக அம்பானி வெளியிடும் ‘ஹனூமான்’

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Ambani's new 'AI' model Hanooman to compete with chat GPT!

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ), வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும், திறம்படவும் செய்து முடிக்கிறது. அமெரிக்காவில் இருந்து உருவாக்கப்பட்ட ‘சாட் ஜிபிடி’க்கு போட்டியாக தற்போது இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தளத்தை பிரபல தொழிலதிபரின் ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவை சேர்ந்த ‘ஓபன் ஏ.ஐ’ என்ற நிறுவனம் ‘சாட் ஜிபிடி’ என்ற செயற்கை நுண்ணறிவு, பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனை போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும். இதனையடுத்து, பல வகையான செயற்கை தொழில்நுட்பங்கள் இணையத்தில் பயன்பாட்டில் இருந்ததால் கூகுள் நிறுவனம் சரிவைக் கண்டது. 

இதனையடுத்து, ‘சாட் ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் ‘பார்ட்’ என்ற செயற்கை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், ‘பார்ட்’ தொழில்நுட்பம் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை என்றே கூறப்படுகிறது. அதனால், அனைத்து தொழில்நுட்பங்களையும் மிஞ்சும் வகையில், ‘ஜெமினி’ என்ற செயற்கை நுண்ணறிவை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி ‘சாட் ஜிபிடி’க்கு போட்டியாக அமைந்தது. இந்த செயற்கை நுண்ணறிவின் மூலம் தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பலரும் தங்களின் பணியை இழக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ‘சாட் ஜி.பி.டி மற்றும் கூகுளின் ஜெமினி போன்றவற்றுடன் போட்டியாக பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் இந்தியாவின் சிறந்த பொறியியல் பள்ளிகளால் ஆதரிக்கப்படும் ‘பாரத் ஜி.பி.டி’ ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ‘ஹனூமான்’ என்ற செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தவுள்ளது.  11 இந்திய மொழிகளில் செயல்படும் இந்த ‘ஏ.ஐ’ மாடல் வருகிற மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.