style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஜியோ நிறுவனம் புதிதாக ஜியோ பிரவுசரை அறிமுக செய்துள்ளது. இந்திய பயன்பாட்டாளர்களை மனதில் கொண்டு இந்த பிரவுசரை உருவாக்கியுள்ளதால், இந்தியர்கள் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ பிரவுசரை தமிழ், தெலுங்கு என இந்தியாவில் உள்ள எட்டு மொழிகளில் பயன்படுத்தலாமென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பிரவுசரை பயன்படுத்துவதற்கு என தனியாக ஆப் ஒன்றையும் ஜியோ அறிமுகம் செய்துள்ளது. தற்போதைக்கு இது வெறும் ஆண்டராயிடு ஃபோன்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக வடிமைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் பிரவுசரில் உள்ள பெரும்பாலான வசதிகள் ஜியோவிலும் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், கூகுள் பிரவுசரை, ஜியோ பிரவுசர் மிஞ்சுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.