Skip to main content

இரண்டாவது மனைவியை 50 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

jharkhand issue husband and wife 

 

ஜார்க்கண்ட்  மாநிலத்தில்  சாகிப்கஞ்ச்  மாவட்டத்தைச் சேர்ந்த ரூபிகா பகதின் என்ற இளம் பெண் (வயது 22). இவர் தில்தார்  அன்சாரி என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்யாமல் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் திருமணம் செய்து உள்ளனர். அன்சாரிக்கு ரூபிகா இரண்டாவது மனைவி ஆவார்.

 

இந்நிலையில் தனது மனைவி மாயமானதாகக் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். மேலும் ரூபிகா  குடும்பத்தினரும், தனது மகளைக் காணவில்லை எனப் புகார் அளித்தனர். மேலும் அப்புகாரில் தில்தார் மீது சந்தேகம் இருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.  இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இவ்வழக்கைத் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

 

அப்போது அங்குள்ள அங்கன்வாடி, பயன்பாட்டில் இல்லாத கட்டடங்கள்  போன்ற பல்வேறு பகுதிகளில் இளம்பெண் ஒருவரின் உடல் பாகங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று உடல் பாகங்களைக் கைப்பற்றினர் .  இது தொடர்பாக தில்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தனது மனைவியை 50 துண்டுகளாக வெட்டி வீசியதாகத் தெரிவித்தார். மேலும் தன் மீது போலீசார் சந்தேகப்படக் கூடாது என்பதால் போலீசாரிடம் தனது மனைவியைக் காணவில்லை எனப் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதுவரைக்கும் 18 பாகங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இந்தக் கொலை பற்றி போலீசார் தெரிவித்தது , "இந்தக் கொலைக்கான காரணம் பற்றி எதுவும் தெரியவில்லை. மரம் அறுக்கும் மின்சார இயந்திரம் மூலம் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம். மேலும் இந்தக் கொலையில் வேறு யாருக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறோம்" என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.