ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (12.12.2019) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. இந்த மாநிலத்தின் ஐந்து கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் நிலையில் இன்று (12.12.2019) மூன்றாம் கட்டமாக 17 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

jharkhand assembly polls third phase 17 assembly constituency peoples

Advertisment

Advertisment

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மூன்றாம் கட்டமாக நடைபெறும் ஜார்க்கண்ட் பேரவை தேர்தலில் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும். இளம் வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என ட்விட்டர் வாயிலாக பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.