ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சரியாக காலை 08.00 மணிக்கு தொடங்கியது.

Advertisment

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் மாதம் 30- ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 65.17% வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு துணை ராணுவ படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி ஜேஎம்எம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

JHARKHAND ASSEMBLY ELECTION 2019 CONGRESS AND BJP ALLIANCE

தற்போதைய நிலவரப்படி 81 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி- 33 இடங்களிலும், பாஜக கூட்டணி- 32 இடங்களிலும், ஜெவிஎம்-4 இடங்களிலும், மற்றவை- 10 இடங்களிலும் முன்னிலை. இதில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.