Skip to main content

புதுச்சேரியில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்கள்!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

Jewelry robbery in subsequent robbery incidents

 

புதுச்சேரி வில்லியனூர் சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் முகமது புகாரி (48). இவர் துபாயில் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி பாத்திமா ஜின்னா (43). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், ஒருவருக்குத் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்துவருகிறார். கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதால் பாத்திமா ஜின்னா தனது இளைய மகளுடன் வீட்டில் தங்கியிருந்தார்.

 

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு பாத்திமா ஜின்னா சில தினங்களுக்கு முன்பு தனது மகளுடன் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் (22.07.2021) அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனே இதுபற்றி பாத்திமா ஜின்னாவுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து பரங்கிப்பேட்டையிலிருந்து வீடு திரும்பிய அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. அதில் வைத்திருந்த செயின், ஆரம், நெக்லஸ், வளையல், உள்ளிட்ட 26 பவுன் நகைகள் மட்டுமின்றி, ரூபாய் 84 ஆயிரம் ரொக்கம் (மொத்தம் ரூபாய் 12 லட்சம் மதிப்பு) ஆகியவையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. 

 

Jewelry robbery in subsequent robbery incidents

 

இதுகுறித்து பாத்திமா ஜின்னா வில்லியனூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். அதையடுத்து மேற்கு எஸ்.பி. ரங்கநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக ஆள் இல்லாததை நோட்டமிட்டு இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் பேரில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்த போலீசார், தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.

 

இதேபோல், புதுச்சேரி லாஸ்பேட்டை, அசோக் நகர், ஜீவானந்தம் வீதியில் வசிக்கும் கருணாகரன் (42) என்பவர் சின்ன மணிக்கூண்டு அருகேயுள்ள பான்லே பூத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (38), பெத்து செட்டிப்பேட்டையில் உள்ள மளிகை கடையில் பணியாற்றிவருகிறார். சில தினங்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற அவர்கள், மாலையில் ராஜேஸ்வரி வீடு திரும்பியபோது கிரில் கேட்டில் பூட்டு உடைக்கப்பட்டு வாசல் மெயின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. அதிலிருந்து ஆரம், நெக்லஸ், செயின், வளையல், மோதிரம் உள்ளிட்ட சுமார் 22 பவுன் நகைகள் மட்டுமின்றி அரை கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

 

இதுகுறித்த தகவலின் பேரில் லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் கொள்ளை நடந்த இடத்தைப் பார்வையிட்டு, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர். அடுத்தடுத்து புதுச்சேரியில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்; தாய், தந்தை, மகன் கைது!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 mother, father and son, were arrested robbery of AIADMK official  house

திருவண்ணாமலை குபேர மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் முருகன். முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற நகரப் பொருளாளராக இருந்தார். தன்னுடைய குடும்பத்தினருடன் திருமணத்திற்காக வெளியூர் சென்ற நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம் 28ம் தேதி திருவண்ணாமலைக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி ஆகியவற்றைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன், இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

அதிமுக பிரமுகர் முருகன் வீட்டில் கொள்ளையடித்ததாக தந்தை சிவா, தாய் அமுதா, இவர்களின் மகன் ரஞ்சித்குமார் மற்றும் ரஞ்சித்குமார் நண்பர் ஸ்ரீராம் ஆகிய நான்கு பேரையும் தனிப்படை போலீசார் மார்ச் 5 ஆம் தேதி கைது செய்து கிராமிய காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

கொள்ளையடித்த நகைகளில் சுமார் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு எல்.இ.டி. டிவியை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். குறிப்பாக ரஞ்சித்குமார் மற்றும் ஸ்ரீராம் இருவரும் இருசக்கர வாகனத் திருட்டில் கைதாகி சிறைக்குச் சென்று தற்போது வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பாக இவர்களுக்கு ரஞ்சித்குமாரின் தாய், தந்தையர் உதவியாக உள்ளனர் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஸ்ரீராம் என்பவரின் கைரேகை மற்றும் அவரின் சமூக வலைத்தள பக்கங்களைக் கொண்டு அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை வேலூர் சாலையில் உள்ள தீபம் நகரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.

Next Story

தொடர் குற்றச் சம்பவம்; பலே திருடனைச் சுற்றி வளைத்த போலீஸ்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
thief who was involved in two-wheeler theft was arrested

வேலூர், காட்பாடி, திருவலம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போயுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே காட்பாடி ரயில் நிலைய பகுதியில் ஒரு இருசக்கர வாகனம்  திருடு போனது தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து காட்பாடி டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று திருவலம் கூட்ரோடு பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். மேலும் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவமும் இவரின் உருவமும் ஒன்றாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, பிடிபட்ட நபர் திருவலம் குகைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் (வயது 40) என்பதும், இவர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரிய வந்தது.

அவரைக்  கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 15 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.