jnu

Advertisment

இந்தியாவின் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 14-ம் தேதி மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய இடதுசாரி கூட்டணிக்கும், ஏபிவிபிக்கும் இடையே நேரடியான கடும் போட்டி நிலவியது.

இதனை தொடர்ந்து சில பிரச்சினைகளுக்கு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணும் பணி மீண்டும் நடைபெற்றது. இதில் ஐக்கிய இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்த சாய் பாலாஜி தலைவராக தெர்ந்தெடுக்கப்பட்டார். சரிகா சவுத்ரி துணைத் தலைவராகவும், அஜாஸ் அகமது ராத்தர் பொதுச்செயலாளராகவும், அமுதா ஜெயதீப் துணை பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.