டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திடீரென மாணவர்களுக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து 15 நாட்களாக தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஜேஎன்யு மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில், பல்கலைக்கழக வளாகம் முன்பு திரண்ட ஏராளமான மாணவர்கள், போலீஸார் வைத்திருந்த தடுப்பு வேலிகளை தாண்டிச் செல்ல முயற்சித்தனர். இதனால் போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தங்களது கோரிக்கைகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்க வேண்டும் என மாணவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
ஏ.ஐ.சி.டி.இ நோக்கி மாணவர்கள் அணிவகுத்துச் செல்ல விரும்பினர், ஆனால் அங்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றி வருவதால் அந்த பகுதி முற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, தடுப்பு போடப்பட்டுள்ளது.