ADVERTISEMENT

குல்லுவில் ஜப்பானிய பெண் மீது பாலியல் அத்துமீறல்;டாக்ஸி டிரைவர் கைது

12:27 PM Jun 02, 2018 | vasanthbalakrishnan

ஏற்கனவே ஆசிபா, உன்னவ் இப்படி நாட்டில் பாலியல் வன்முறைகள் பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என குற்றசாட்டுகள் அதிகரித்து வருகின்ற நிலையில் ஹிமாச்சல பிரதேசம் குல்லுவில் ஜப்பானிய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஹிமாசல பிரதேசத்தில் குல்லு நகரில் டாக்ஸி டிரைவர் ஒருவரால் ஜப்பானிய பெண்மணி கற்பழிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஜப்பானிய பெண்ணை மீட்ட போலீசார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த டாக்ஸி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து கைதுசெய்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

"இந்த குற்றச்சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு நபரை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட ஜப்பானிய பெண் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது " என குல்லு காவல்துறை அதிகாரி ஷாலினி அக்னிஹோத்ரி தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT