/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/praks (1).jpg)
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (02/09/2020) காலை நடைபெற்றது.இதில் கரோனா தடுப்பு பணிகள், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றன.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "ஜம்மு- காஷ்மீரின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உருது, காஷ்மீரி, டோக்ரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு பணியாளர்களின் திறனை மேம்படுத்த மிஷன் கர்மயோகி திட்டத்தை செயல்படுத்தவும் அமைச்சரை ஒப்புதல் அளித்துள்ளது." இவ்வாறு அமைச்சர் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)